நாமக்கல்லில் பிப்ரவரி 24ல் திருமண தடை நீங்க சுயம்வர கலா பார்வதி யாகம்
நாமக்கல் அருகே திருமண தடை நீக்கும் சுயம்வர கலா பார்வதி யாகம் வருகிற பிப்ரவரி 24 இல் நடக்கிறது.;
Update: 2024-02-20 09:09 GMT
நாமக்கல் அருகே திருமண தடை நீக்கும் சுயம்வர கலா பார்வதி யாகம் வருகிற பிப்ரவரி 24 இல் நடக்கிறது.
நாமக்கல் அருகே திருமண தடை நீக்கும் சுயம்வர கலா பார்வதி யாகம் வருகிற பிப்ரவரி 24 இல் நடக்கிறது. நாமக்கல் - மோகனூர் சாலை, அணியாபுரத்தில் உள்ள அஷ்ட பைரவர் ஆலயத்தில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மகத்தை முன்னிட்டு திருமண தடை நீங்கும் சுயம்வர பார்வதி யாகம் நடப்பது வழக்கம்.
இந்தாண்டுக்கான யாகம் வருகிற சனிக்கிழமை (பிப்ரவரி 24) மாலை 4 மணியளவில் தொடங்குகிறது. திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது ஜாதகத்தின் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வந்து யாகத்தில் கலந்து கொள்ளலாம்.