டேங்கர் லாரி உரிமையாளர்கள் போராட்டத்திற்கு ஆதரவு

மோட்டார் வாகனங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வரி உயர்வை கண்டித்து நவ. 9 ந் தேதி நடைபெறும் லாரி நிறுத்த போராட்டத்திற்கு சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2023-10-31 12:28 GMT

லாரி உரிமையாளர் சங்க உறுப்பினர்கள்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் பாண்டிச்சேரி உள்ளடக்கிய, தென் மண்டல எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் 34 வது மகா சபை கூட்டம் நாமக்கல்லில் நடைபெற்றது. சங்க தலைவர் சுந்தர்ராஜன் தலைமை வகித்தார். கூட்ட முடிவில் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சுங்க கட்டணம், டயர் உள்ளிட்ட உதிரி பாகங்கள் விலை, மூன்றாம் நபர் விபத்து காப்பீடு கட்டணம் விலை உயர்வால் நாளுக்கு நாள் லாரி தொழில் அழிவை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் லாரிகளுக்கு பசுமை வரி ரூ.500 ல் இருந்து ரூ.750 ஆகவும் காலாண்டு வரி 6 சக்கர லாரிகளுக்கு ரூ.3,596 ல் இருந்து ரூ.904 உயர்த்தி ரூ.4,550 ஆகவும் 10 சக்கர லாரிகளுக்கு ரூ.4,959 ல் இருந்து ரூ.2,041 உயர்த்தி ரூ.7,059 ஆகவும் 12 சக்கர லாரிகளுக்கு ரூ.6,373 ல் இருந்து ரூ.3,327 உயர்த்தி ரூ‌9,170 ஆகவும் 14 சக்கர லாரிகளுக்கு ரூ.7,787 ல் இருந்து ரூ.3,413 உயர்த்தி ரூ.11,290 ஆகவும் 16 சக்கர லாரிகளுக்கு ரூ.4,200 உயர்த்தப்பட்டுள்ளது.

இந்த வரி உயர்வை மறு பரிசீலனை செய்து திரும்ப பெற வேண்டும். இதனை வலியுறுத்தி மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் சார்பில் தமிழகம் முழுவதும் வரும் நவம்பர் 9 ந் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை லாரிகள் இயங்காது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டத்திற்கு தென் மண்டல எல் பி ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் ஆதரவு தெரிவித்து அன்றைய தினம் தமிழகம் முழுவதும் உள்ள சுமார் 2 ஆயிரம் எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் இயங்காது எனவும் இதனால் 2 முதல் 3 கோடி ரூபாய் வரை வருவாய் இழப்பு ஏற்படும் எனவும் தெரிவித்தார்.

அதனை தொடர்ந்து பேசிய, மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் தன்ராஜ், காலாண்டு வரி உயர்வு, ஆன்லைன் அபராதம் உள்ளிட்டவை ரத்து செய்யக்கோரி தமிழகம் முழுவதும் லாரி உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடபட உள்ளநிலையில் அதற்கு எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல இலகு ரக வாகனங்கள் சங்கம், சுற்றுலா வாகன சங்கம் போன்றவைகளும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனால் அன்றைய தினம் தமிழகம் முழுவதும் 25 லட்சம் வாகனங்கள் இயங்காது. அதே போல லாரி தொழிலை சார்ந்து உள்ள லாரி பாடி கட்டு தொழிற்சாலைகள், டயர் ரீட்டேரிடிங் நிறுவனங்கள், பெயிண்ட் தொழிலாளர்கள் என பலரும் வேலைநிறுத்தத்தில் ஈடபட உள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அரசு உடனடியாக அழைத்து பேசி தங்களது கோரிக்கைகளை ஏற்க வேண்டும் எனவும் அவ்வாறு இல்லையெனில் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடபட உள்ளதாகவும் தெரிவித்தார்.

Tags:    

Similar News