தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் 24 இடங்களில் சிறப்பு ரமலான் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஈகைத் திருநாளையொட்டி (ரமலான்) ஈதுல் பெருநாள் சிறப்புத் தொழுகை 24 இடங்களில் நடைபெற்றது.

Update: 2024-04-11 06:26 GMT

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஈகைத் திருநாளையொட்டி (ரமலான்) ஈதுல் பெருநாள் சிறப்புத் தொழுகை 24 இடங்களில் நடைபெற்றது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஈகைத் திருநாளையொட்டி (ரமலான்) ஈதுல் பெருநாள் சிறப்புத் தொழுகை 24 இடங்களில் நடைபெற்றது. நிகழாண்டு ரமலான் பண்டிகையை தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் கொண்டாடுகின்றனர்.

புதுக்கோட்டை நகர கிளை 1, 2,முக்கண்ணாமலைப்பட்டி, அன்னவாசல், ஆலங்குடி, கறம்பக்குடி, கீரமங்கலம், அறந்தாங்கி, வெட்டிவயல், ரெத்தினக்கோட்டை, ராஜேந்திரபுரம், கோட்டைபட்டினம், வடக்கு அம்மாபட்டினம் 1,2,ஜெகாதப்பட்டினம்,கோபாலபட்டினம்,ஆர்.புதுப்பட்டினம்,முத்துக்குடா,கிருஷ்ணாஜிபட்டினம், மேற்பனைக்காடு, காசிம்புதுப்பேட்டை ஆகிய கிளைகள் சார்பில் 24 கிளைகள் சார்பில் 24 இடங்களில் ஈகைத் திருநாள் சிறப்புத் தொழுகை தவ்ஹீத் திடல்களில் நடைபெற்றன. இதில் மாவட்ட பேச்சாளர்கள் கலந்து கொண்டு, அன்பையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் பெருநாள் குறித்து உரையாற்றினர். ஏராளமான இஸ்லாமியர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News