ஆசிரியர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2024-02-27 05:44 GMT

ராமநாதபுரம் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் மாவட்ட ஆட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ராமநாதபுரம் மாவட்டம் ஆட்சியர் வளாகத்தின் முன்பாக இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பில் திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண் 311- சம வேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை விரைந்து நிறைவேற்றக் கோரியும் , தொடர் முற்றுகைப் போராட்டத்தில் ஆசிரியர்களைக் கைது செய்வதைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆசிரியர் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் திரளாக கலந்து கொண்டு கண்டனத்தை தெரிவித்தனர்.
Tags:    

Similar News