முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருநெல்வேலியில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2024-06-29 07:10 GMT

திருநெல்வேலியில் முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.


திருநெல்வேலி மாவட்ட தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் கூட்டு இயக்கங்கள் சார்பில் வண்ணாரப்பேட்டை முதன்மை கல்வி அலுவலர் அலுவலகம் முன்பு நேற்று மாலை ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் பொழுது பதவி உயர்வு தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழக்கு முடியும் வரை மாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகளை நிறுத்தி வைக்க வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் உயர்மட்ட குழு உறுப்பினர் மணிமேகலை சிறப்புரையாற்றினார். இதில் ஆசிரியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News