3 வயது மகனுடன் இளம்பெண் மாயம் - போலீசில் புகார்

திங்கள் சந்தை அருகே 3 வயது மகனுடன் இளம்பெண் மாயம் - புகாரின் பேரில் இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-03-02 02:21 GMT

 இளம்பெண் மாயம்

குமரி மாவட்டம் திங்கள்சந்தை அருகே உள்ள மயிலோடு பகுதியை சேர்ந்தவர் பிரவீன் ராஜா (30). இவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். இவர் மனைவி ரூஷ் பெர்லிசா (27). இந்த தம்பதிக்கு 3 வயதில் ஒரு மகன் உள்ளார்.பிரவீன் ராஜா வெளிநாட்டில் இருப்பதால் ரூஸ்பெர்லிசா வில்லுக்குறி அடுத்த மாடத்தட்டு விளை பகுதியில் உள்ள தாயார் வீட்டில் மகனுடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 27 ஆம் தேதி மாலை ரூஸ்பெர்லிசா தனது மகனுடன் மயிலோட்டிலுள்ள தனது கணவர் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். பின்னர் அவர் வீட்டிற்கு செல்லவில்லை. இதை அடுத்து தாயார் எஸ்டின்மேரி மகளின் போனில் தொடர்பு கொண்ட போது,  செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது. உறவினர் வீடுகளில் உட்பட பல இடங்களில் தேடியும்  கண்டுபிடிக்க முடியவில்லை. இது குறித்து எஸ்டீன் மேரி கொடுத்த புகாரின் பேரில்  இரணியல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News