கஞ்சா வைத்திருந்த வாலிபர் கைது

அரக்கோணம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த பரத் என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

Update: 2024-05-13 02:36 GMT
கஞ்சா வைத்திருந்தவர் கைது
ராணிபேட்டை மாவட்டம், அரக்கோணம் டவுன் காவல் நிலைய போலீசார் ரயில்வே ஸ்டேஷன், பஜார், தோல் ஷாப், அவுசிங் போட்டு, சுவால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது தோல் ஷாப் அருகே போலீசாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பியோட முயன்ற வாலிபரை மடக்கி பிடித்து விசாரித்தனர்.விசாரணையில் அவர் அதே பகுதியை சேர்ந்த பரத் (24) என்பதும் கஞ்சா வைத்திருந்ததும் தெரியவந்தது. இதனையடுத்து அவரிடம் இருந்து 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர்.
Tags:    

Similar News