வாலிபர் விஷம் குடித்து தற்கொலை!
மெஞ்ஞானபுரம் அருகே அருகே கடன் பிரச்சனையால் வாலிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
Update: 2024-02-23 10:32 GMT
தூத்துக்குடி மாவட்டம், மெஞ்ஞானபுரம் அருகேயுள்ள நங்கைமொழி கிராமம், ஜேஜே நகரைச் சேர்ந்தவர் முருகன் மகன் மணிகண்டன் (23). இவர் வீடு கட்ட கடன் வாங்கினாராம். கடனை திருப்பி செலுத்த முடியவில்லையாம். இதனால் மன வேதனையில் இருந்த அவர் நேற்று விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து மெஞ்ஞானபுரம் இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.