மேலப்பாளையத்தில் வாலிபர் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பகுதியில் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-03-03 08:33 GMT

வாலிபர் தற்கொலை

திருநெல்வேலி மாவட்டம், மேலப்பாளையம் பஷீர் அப்பா வடக்கு தெருவை சேர்ந்த வாலிபர் ஒருவர் இன்று (மார்ச் 3) தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மேலப்பாளையம் காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News