குரும்பேரி அருகே வாலிபர் அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம்

குரும்பேரி அருகே டாஸ்மாக் கடைக்கு சென்றவர்மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி படுகாயம் அடைந்தார்.

Update: 2024-05-18 14:51 GMT

கோப்பு படம் 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட குரும்பேரி அடுத்த நாகரசம்பட்டி பகுதியை சேர்ந்த தருமன் மகன் தன்ராஜ் வயது 35 இவர் கூலி வேலை செய்து வருகின்றார் தன்ராஜ் இவருக்கு குடிப்பழக்கம் உள்ளதாக கூறப்படுகின்றது இந்நிலையில் இவர் அருகே உள்ள மது பான கடைக்கு சென்று உள்ளதாக கூறப்படுகின்றது.

அப்போது நாகரசம்பட்டி கூட்டு ரோடு அருகே நடந்து நடந்து செல்லும்போது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதி விட்டு சென்றுள்ளது படுகாயம் அடைந்த தன்ராஜ் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு,

பின்னர் மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பிவைக்க பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் இச்சம்பவம் குறித்து கந்திலி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு அடையாளம் தெரியாத வாகனத்தை தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

Similar News