விரக்தியில் விஷம் குடித்த வாலிபர் உயிரிழப்பு

மலைப்பாளையம் புதூரை சேர்ந்த நஞ்சப்பன் குடிப்பழக்கம் காரணமாக மனைவியுடன் மனக்கசப்பு ஏற்பட்டதால், விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2024-01-17 09:08 GMT

கரூர் மாவட்டம், புகலூர் தாலுகா, காருடையாம்பாளையம் அருகே உள்ள மலைப்பாளையம் புதூர் பகுதியை சேர்ந்தவர் நஞ்சப்பன் வயது 39. இவரது மனைவி புனிதா வயது 27 நஞ்சப்பன் சமீபகாலமாக அதிக அளவில் மது அருந்தி வந்துள்ளார். இதனை அவரது மனைவி தட்டி கேட்டு உள்ளார்.

இதனால் கணவன் மனைவி இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விரக்தியில் வாழ்ந்து வந்த நஞ்சப்பன், ஜனவரி 11ஆம் தேதி காலை 11 மணியளவில், மதுவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை மீட்டு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சையில் இருந்து வந்த நஞ்சப்பன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக நஞ்சப்பனின் மனைவி புனிதா அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட க.பரமத்தி காவல்துறையினர் உயிரிழந்த நஞ்சப்பனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் க. பரமத்தி காவல்துறையினர்.

Tags:    

Similar News