தாதகாப்பட்டி காளியம்மன் கோவில் திருவிழாவில் வாலிபருக்கு கத்திக்குத்து

சேலம் தாதகாப்பட்டி வழி வாய்க்கால் காளியம்மன் கோவில் திருவிழாவில் வாலிபருக்கு கத்திக்குத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2024-02-08 16:38 GMT
கோப்பு படம் 

சேலம் தாதகாப்பட்டி வழிவாய்க்கால் காளியம்மன், மாரியம்மன் கோயில் திருவிழா நடந்து வருகிறது. நேற்றிரவு கோயில் திருவிழாவிற்கு அப்பகுதி மக்கள் ஏராளமானோர் வந்திருந்தனர்.

இதில், தாதகாப்பட்டியை சேர்ந்த பழனிசுந்தர் மகன் சபரிநாதன் (18) வந்திருந்தார். அவர் கோயில் அருகே நின்றிருந்தபோது, குடிபோதையில் வந்திருந்த 4 பேர் கும்பல் அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

அதில், ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சபரிநாதனின் வயிற்றில் குத்தினார். ரத்தம் கொட்டிய நிலையில் சபரிநாதன் கீழே விழுந்தார். அங்கிருந்து 4 பேர் கும்பலும் தப்பியோடினர். உடனே படுகாயமடைந்த சபரிநாதனை அங்கிருந்தவர்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அன்னதானப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். அதில், கத்திக்குத்தில் ஈடுபட்டது, தாதகாப்பட்டியை சேர்ந்த சீனிவாசன், பிரகாஷ், அவரது நண்பர்கள் 2 பேர் எனத் தெரியவந்தது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News