திருமயம் அருகே சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா

திருமயம் அருகே சுப்ரமணியசுவாமி கோவிலில் தைப்பூச திருவிழா நடைபெற்றது.

Update: 2024-01-26 13:37 GMT

தைப்பூச விழாவில் கலந்து கொண்டவர்கள்

திருமயம் அருகே மலைய கோவில் சுப்ரமணியசுவாமி, திருவருட் காளீஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே மலைய கோவில் அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணியசாமி காளீஸ்வரர் திருக்கோவிலில் தைப்பூச திருநாளை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் வருடம் தோறும் நடக்கக்கூடிய தீர்த்தவாரி காவடி தூக்கியும் பால்குடம் எடுத்தும் கரும்புத் தொட்டில் குழந்தை எடுத்தும் காவடி எடுத்தும் தீ மிதித்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்

அதனை சுற்றியுள்ள கிராம பகுதியில் ஆனநச்சாந்துபட்டி, மேலப்பனையூர், விராச்சிலை, தாளம்பட்டி ஊர்களில் இருந்தும் அங்கு சாப்பிட்டேன்உற்சவர் சிலையை எடுத்து ஊர்வலமாக வந்து மழையின் அருகே இருக்கக்கூடிய சுணை தீர்த்தத்தில் நீராடி தரிசனம் செய்தனர் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமியை வழிபட்டு சென்றனர். பனையப்பட்டி காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் விழா ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்

Tags:    

Similar News