தரங்கம்பாடி: மின்னல் தாக்கி மீனவர் பலி, மற்றொருவர் படுகாயம்

Update: 2023-11-10 05:15 GMT

உயிரிழந்த மீனவர் அருண் 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா பெருமாள்பேட்டை மீனவ கிராமத்தைச் சேர்ந்த கண்ணபிரான் தனக்கு சொந்தமான பைபர் படகில் தனது அண்ணன் அருண் மற்றும் மணிவேல், கவிராஜ், சுப்பிரமணியன் ஆகியோருடன் நேற்று மதியம் 3 மணிக்கு கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றுள்ளார். இடி மின்னலுடன் மழை பெய்து வந்ததால் இன்று அதிகாலை தரங்கம்பாடி துறைமுகத்திற்கு திரும்பியுள்ளனர். ஒவ்வொருவராக கரை இறங்கியபோது இறுதியாக படகில் இருந்த அருண் படகிலிருந்து இறங்கும் நேரத்தில் திடீரென்று மின்னல் தாக்கி தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியானார். பக்கத்து படகில் இருந்த குட்டியாண்டியூர் கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜேந்திரன் (48) மின்னல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். அவரை காரைக்கால் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இச்சம்பவம் குறித்து கடலோர காவல் குழும போலீசார் மற்றும் பொறையார் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News