தரங்கம்பாடி சீதளாதேவி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா

தரங்கம்பாடி சீதளாதேவி மாரியம்மன் ஆலய தீமிதி திருவிழா நடைபெற்றது.

Update: 2024-05-27 16:18 GMT

தீமிதி திருவிழா

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா இலுப்பூர் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன் திருக்கோயில் உள்ளது. கோவிலின் 28ஆம் ஆண்டு தீமிதி திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. விழாவை முன்னிட்டு கடந்த 20ஆம் தேதி பூச்சொறிதலுடன் காப்பு கட்டி விழா துவங்கியது.

தீமிதி திருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் அம்மனுக்கு கிராமவாசிகளால் அபிஷேக ஆராதனையுடன் அம்மன் வீதி உலா நடைபெற்று வந்தன. 8-ஆம்நாள் திருவிழாவான தீமிதி திருவிழாவை முன்னிட்டு சங்கரன்பந்தல் வீரசோழன் ஆற்றில் இருந்து மேள வாத்தியங்கள் முழங்க சக்தி கரகம், அலகு காவடி, பால் காவடி புறப்பட்டு விரதமிருந்த பக்தர்கள் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

தொடர்ந்து கோயில் முன்பு அமைக்கப்பட்ட பூக்குழியில் சக்திகரகம் இறங்கியது. தொடர்ந்து மஞ்சள் உடை உடுத்தி காப்பு கட்டி விரதம் இருந்த பெண்கள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான பக்தர்கள் பூக்குழி இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். 10 க்கும் மேற்பட்ட 16 அடி நீளம் கொண்ட அளவு காவடி எடுத்த பக்தர்கள் பக்தி பரவசத்துடன் ஆனந்த நடனமாடியவாறு தீக்குழயில் இறங்கி தீ மிதித்தனர். பெண்கள் மாவிளக்கு படையலிட்டு அம்மனை வழிபாடு செய்தனர். தொடர்ந்து பச்ச காளி பவளக்காளி ஆட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்பாளை தரிசனம் செய்தனர்.

தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தீமிதி திருவிழாவினை இலுப்பூர் கிராமவாசிகள் மற்றும் விழா குழுவினர்கள் சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

Tags:    

Similar News