தவெக தலைவர் விஜய் 50வது பிறந்தநாள்-அழகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்த விஜய் ரசிகர்கள்!

தவெக தலைவர் விஜய் 50வது பிறந்தநாள் முன்னிட்டு விஜய் ரசிகர்கள் அழகர் கோவிலில் தங்கத்தேர் இழுத்தனர்.

Update: 2024-06-21 09:31 GMT

தங்கத்தேர்

மேலூர் அருகே அழகர்கோவில், பழமுதிர்சோலை முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்த த.வெ.க.,வினர்: நடிகர் விஜய்யின் 50வது பிறந்தநாளையொட்டி வழிபாடு நடத்திய அவர்கள் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்று தமிழகத்தில் ஆட்சி அமைப்பார் என நம்பிக்கை.

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் நடிகர் விஜய்யின் 50-வது பொன்விழா பிறந்தநாள் நாளை கொண்டாப்பட உள்ள நிலையில், அவரது ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், வழிபாட்டு தலங்களில் சிறப்பு பூஜைகள் செய்தும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், நடிகர் விஜய்யின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, மதுரை மாவட்டம் மேலூர் தொகுதி தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சார்பில், அழகர்கோவிலில் உள்ள பழமுதிர்சோலை முருகன் கோயிலில் தங்கத்தேர் இழுத்து வழிபட்டனர். தொடர்ந்து, வரும் 2026- சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் அதிக இடங்களில் வெற்றிப் பெற்ற வேண்டி முருகன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டனர். தொடர்ந்து, அவர்கள் கூறும்போது,

வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு தளபதி விஜய், தமிழகத்தில் ஆட்சியை கைப்பற்றுவார். அதற்கான வலுவான கூட்டணியை அமைப்பதற்கான த.வெ.க., வியூக வகுக்கும் என தெரிவித்தனர். இதில் த.வெ.க., மதுரை வடக்கு மாவட்ட மேலூர் தொகுதி இளைஞர் அணி தொண்டர் அணி நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News