தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி!

வேலூர் மாநகரில் தண்ணீர் தொட்டியில் சிறுவன் தவறி விழுந்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2024-04-27 07:38 GMT

பலி

வேலூர் விருப்பாட்சிபுரம் அடுத்த குளவிமேடு பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் சிவலிங்கம் (வயது 49). இவரது மகன் முகுந்தன் (9). 4-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் கடந்த 24-ந் தேதி அன்று வீட்டின் அருகே இருந்த தண்ணீர் தொட்டிக்கு தண்ணீர் எடுக்க சென்றான். அப்போது அவன் எதிர்பாராத விதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தான். இதைப்பார்த்த சிவலிங்கம் அவனை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுவனை பரிசோதனை செய்த டாக்டர்கள் சிறுவன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து பாகாயம் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News