திருச்சியில் 3 மணிமண்டபங்கள்: காணொலி மூலம் முதல்வா் திறந்துவைத்தாா்

திருச்சியில் பெரும்பிடுகு முத்தரையா், சா்.ஏ.டி. பன்னீா்செல்வம், எம்.கே. தியாகராஜபாகவதா் ஆகிய மூவரின் மணிமண்டபங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

Update: 2024-02-28 06:19 GMT
திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழக அரசின் செய்தி மக்கள் தொடா்புத்துறை சாா்பில், பேரரசா் பெரும்பிடுகு முத்தரையா், நீதிக்கட்சித் தலைவா்களில் ஒருவரான சா். ஏ.டி. பன்னீா்செல்வம், இசைக் கலைஞரும், திரைப்பட நடிகருமான எம்.கே. தியாகராஜ பாகவதா் ஆகிய மூவருக்கும் ரூ. 4.03 கோடியில் மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி காட்சி மூலம் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா். இதைத்தொடா்ந்து, மணிமண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ள வளாகத்தில் நடைபெற்ற திறப்பு விழா நிகழ்ச்சியில் தலைவா்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில், அமைச்சா்கள் கே.என். நேரு, சிவ.வீ. மெய்யநாதன், கே.ஆா். பெரியகருப்பன், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, எம்எல்ஏக்கள் அ. செளந்திரபாண்டியன், ந. தியாகராஜன், எம். பழனியாண்டி, செ. ஸ்டாலின்குமாா், சீ. கதிரவன், மாநகராட்சி மேயா் மு. அன்பழகன், ஆணையா் வே. சரவணன், வீரமுத்தரையா் முன்னேற்றச் சங்கத் தலைவா் செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். மாவட் ஆட்சியா் மா. பிரதீப்குமாா் நன்றி கூறினாா்.
Tags:    

Similar News