காட்பாடியில் மகா மண்டபம் அமைக்கும் பணி துவக்கம்

காட்பாடியில் கிராம தேவதை சுந்தரி அம்மன் கோயிலில் மகா மண்டபம் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-02-22 11:56 GMT

பூமி பூஜையில் கலந்து கொண்டவர்கள் 

வேலூர் மாவட்டம் காட்பாடி குமரப்பன் நகர் பகுதியில் உள்ள அருள்மிகு கிராம தேவதை சுந்தரி அம்மன் கோயிலில் ஏழு ஊர்களுக்கான கிராம தேவதையாக உள்ளது.

இந்த கோயில், சுந்தரி அம்மன் கோயில் , அறக்கட்டளை இன் சார்பில் கோயிலில் கருங்கல் மண்டபம் 33 அடியில் அமைத்து கர்ப்ப கிரகமும் , அர்த்த மண்டபமும் அமைக்கும் பணி முடிவடைந்த நிலையில் , அடுத்த கட்டமாக சுந்தரி அம்மன் கோயில் விழா குழுவினர் சார்பில் 60 அடி நீளம் 70 லட்சம் மதிப்பில் நிதி திரட்டி மகா மண்டபம் அமைப்பதற்காக சுந்தரி அம்மன் கோயில் , விழா குழுவினர் சார்பில் இன்று பூமி பூஜை நடைபெற்றது.

இந்த பூமி பூஜையில் விழா குழுவினர் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News