சமையல் தொழிலாளி மா்மமான முறையில் பலி
சமையல் தொழிலளி ரத்தக்காயங்களுடன் மர்மமான முறையில் பலி.போலீசார் விசாரணை.
Update: 2024-02-05 07:08 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கரும்பனூா் புதுமை நகரைச் சோ்ந்த சீனி மகன் செல்வம் (38). சமையல் தொழிலாளியான இவா் மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்தாராம். அவருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். அவா் வீட்டில் நேற்று மாலை வாசலில் வாயிலும், காலிலும் ரத்தத்துடன் இறந்து கிடந்தாராம். தகவலின்பேரில் ஆலங்குளம் போலீஸாா் சென்று, சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும் ஆலங்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.