நெல்லையில் நிலவேம்பு கசாயம் வழங்கிய திமுகவினர்

நெல்லையில் நிலவேம்பு கசாயம் திமுகவினர் வழங்கினர்.

Update: 2023-12-29 10:05 GMT

நிலவேம்பு கசாயம் வழங்கிய திமுகவினர்

திருநெல்வேலி மத்திய மாவட்ட திமுக பொறுப்பாளர் மைதீன்கான் ஏற்பாட்டில் மேலப்பாளையம் பகுதி 31வது வார்டுக்கு உட்பட்ட மகிழ்ச்சி நகர், திருநகர், ராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளில் நிலவேம்பு கசாயம் இன்று வழங்கப்பட்டது.

நெல்லை மாவட்ட திட்டக்குழு உறுப்பினர்கள் ஜூலியட் மேரி கலந்து கொண்டு பொது மக்களுக்கு கசாயங்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் கிரிஜா குமார், மாவட்ட மகளிர் அணி தலைவி ரேவதி அசோக்,மாவட்ட மகளிர் தொண்டர் அணி துணை அமைப்பாளர் பவானி உள்ளிட்ட திமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News