சிவகாசியில் 7வது நாளாக நீர்மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர்

சிவகாசியில் 7 வது நாளாக நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி.

Update: 2024-05-07 11:25 GMT
சிவகாசியில் 7 வது நாளாக நீர்,மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி ...

சிவகாசியில்,அதிமுக கட்சி சார்பில் நீர், மோர் பந்தல்.முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.. விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பல்வேறு பகுதிகளில் அதிமுக கட்சி சார்பில் பொது மக்களுக்கான நீர், மோர் பந்தலை முன்னாள் அமைச்சர் திறந்து வைத்தார்.

விருதுநகர் மேற்கு மாவட்ட அதிமுக சார்பில், கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தீர்ப்பதற்காக சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டது. இன்று 7 வது நாளாக விருதுநகர் மாவட்ட மருத்துவரணி சார்பாக திருத்தங்கல் குறுக்கு பாதையில் அமைக்கப்பட்ட நீர்,மோர் பந்தலை விருதுநகர் மேற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி,திறந்து வைத்து,பொது மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர்,மோர், ரோஸ் மில்க்,பழ வகைகள்,இளநீர் வழங்கினார்.

நிகழ்ச்சியில், விருதுநகர் மாவட்ட மருத்துவரணி செயலாளர், மருத்துவர் V.M.விஜயஆனந்த், தகவல் தொழில் நுட்ப பிரிவு மாவட்ட துணைத் தலைவர் மாயாண்டி உள்பட சிவகாசி மாநகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் அதிமுக கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News