கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய கும்பல்
ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் அருண் (25).ரோட்டில் நடந்து சென்றபோது மர்ம கும்பல் அரிவாளால் வெட்டியதில் படுகாயம் அடைந்தார்.
Update: 2024-02-19 11:28 GMT
திண்டுக்கல் கிழக்கு ஆரோக்கியமாதா தெருவை சேர்ந்தவர் அருண் (25). கூலித்தொழிலாளி இவர் பாரதி ஹாஸ்டல் ரோட்டில் நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக வந்த மர்ம கும்பல் அரிவாளால் அருணை சரமாரியாக வெட்டியதில் படுகாயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து நகர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.