இளம்பெண் மாயமானதாக பெண்ணின் தாய் புகார் !
நத்தம் அருகே கோமனாம்பட்டியை சேர்ந்த இளம்பெண் மாயமானதாக பெண்ணின் தாய் நத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
Update: 2024-03-04 06:06 GMT
நத்தம் அருகே கோமனாம்பட்டியை சேர்ந்த இளம்பெண் மாயமானதாக பெண்ணின் தாய் நத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அடுத்துள்ள கோமனாம்பட்டியை சேர்ந்தவர் வாசுகி (வயது21). வீட்டில் இருந்த அவர் திடீரென மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடி பார்த்தும் கிடைக்க வில்லை. இது குறித்து அவரது தாய் பூமா நத்தம் போலீஸில் புகார் செய்தார். அதன் பேரில் நத்தம் போலீஸார் வழக்கு பதிவு செய்து மாயமான இளம்பெண்ணை தேடி வருகின்றார்.