பழவூரில் ஓடை மணல் கடத்தியவர் அதிரடி கைது

பழவூரில் ஓடை மணல் கடத்தியவரை கைது செய்யப்பட்டு டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-03-02 01:53 GMT

காவல்துறை 

நெல்லை மாவட்டம் பழவூர் அம்பலவானபுரம் ஓடை அருகே பலவூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் அணிஷ் நேற்று (மார்ச் 1) வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது சாமி துரை என்பவர் ஓட்டி வந்த டிப்பர் லாரியில் உரிய அனுமதி சீட்டு இன்றி சட்டவிரோதமாக ஓடை மணலை ஏற்றி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து போலீசார் சாமிதுரையை கைது செய்து அவரிடமிருந்து 1 யூனிட் ஓடை மணலையும், டிப்பர் லாரியையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News