சிவகாசியில் புத்தக திருவிழா - மாநகராட்சி மேயர் பங்கேற்பு

வருகின்ற 14ம் தேதி வரை சிவகாசி புத்தக திருவிழா நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-03 01:49 GMT
சிவகாசியில் புத்தக திருவிழாவில் கலந்து கொண்ட மாநகராட்சி மேயர்...

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் தமிழ்நாடு புத்தக விற்பனையாளர்கள் சங்கம், தமிழ்நாடு. முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம்மற்றும் ஜே.சி.ஐ சிவகாசி டைனமிக் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சிவகாசி டவுன் ஆகியோர் இணைந்து நடத்தும் கோடைகால புத்தக திருவிழா என்ற தலைப்பில் மாபெரும் புத்தகக் கண்காட்சியிணை சிவகாசி மாநகராட்சி மேயர் சங்கீதா இன்பம் திறந்து வைத்தார்கள்.

நிகழ்ச்சியில் மாமன்ற உறுப்பினர்கள் மகேஸ்வரி, ராஜேஷ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பொதுமக்கள் புத்தக பிரியர்கள் கலந்து கொண்டு பத்தாயிரம் தலைப்புகளில் 1 லட்சம் புத்தகங்கள் ஒரே இடத்தில் விற்பனைக்கு இருப்பதை கண்டு வியப்படைந்தனர்.13-05-2024 வரை இந்த புத்தக திருவிழா நடைப்பெறுகிறது.

Tags:    

Similar News