மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிய எம்.எல்.ஏ

Update: 2023-12-13 04:00 GMT
சிமெண்ட் சாலை திறப்பு விழாவில் எம்எல்ஏ பங்கேற்பு
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட, இராமபுரம் ஊராட்சி,வேலாமூர் கிராம பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான வேலாமூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டி மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினரிடம் மனு அளித்தனர். இதனை தொடர்ந்து மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர்  மரகதம் குமரவேல் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூபாய் 15 இலட்சம் நிதி ஒதுக்கி வேலாமூர் கிராமத்தில் சிமெண்ட் சாலை அமைக்கும் பணி மேற்கொண்டு அதற்கான திறப்புவிழா நேற்று  நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை அச்சிறுப்பாக்கம் வடக்கு ஒன்றிய செயலாளர் விவேகானந்தன், ஒன்றிய அவைத் தலவர் சேரன் ஆகியோர் ரிப்பன் வெட்டி கல்வெட்டு திறந்து இனிப்புகள் வழங்கி துவங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி மன்ற தலைவர், ஒன்றிய குழு உறுப்பினர், கட்சி நிர்வாகிகள், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News