கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு நன்றி தெரிவித்த காடையாம்பட்டி மக்கள் !

காடையாம்பட்டியில் பாதை இல்லாத நிலையில் பாதை அமைப்பு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.

Update: 2024-03-01 09:57 GMT
சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள தும்பிப்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட மேஸ்திரி வளவு பகுதியில் சுமார் 50 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாதை இல்லாததால் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து பாதை ஏற்படுத்தி கொடுக்க பல்வேறு அரசு அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியினரை நாடினர். இதையடுத்து கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளின் தீவிர முயற்சியால் அப்பகுதியில் சுமார் 10 அடி அகலம் உள்ள பாதை நிறுவப்பட்டது. தொடர்ந்து சுமார் 100ஆண்டு காலமாக பாதை இல்லாத நிலையில் பாதை அமைப்பு கொடுத்த கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நன்றியும் பாராட்டும் தெரிவித்தனர்.
Tags:    

Similar News