விபத்தில் காயமடைந்தவர் பலி!
அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் ஒருவர் பலி.போலீசார் வழக்கு பதிவு.;
By : King 24x7 Angel
Update: 2024-02-24 04:40 GMT
விபத்தில் காயமடைந்தவர் பலி
விராலிமலை பெரியார் நகரை சேர்ந்தவர் கருப்பசாமி(37). நேற்று முன்தினம் காலை மாதிராப்பட்டி பிரிவு சாலை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார். திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கருப்பசாமி அங்கு உயிரிழந்தார். இதுகுறித்து விராலிமலை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.