பைக் விபத்தில் காயம் அடைந்தவர் சாவு!

தூத்துக்குடி அருகே பைக் விபத்துக்குள்ளானதில் படுகாயம் அடைந்த நபர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.;

Update: 2024-06-21 06:02 GMT
பைக் விபத்தில் காயம் அடைந்தவர் சாவு!

விபத்து 

  • whatsapp icon
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்தவர் தேவராஜ் மகன் குணசிங் (58). கடந்த 18ஆம் தேதி தூத்துக்குடி - பாளை., பிரதான சாலையில அந்தோணியார் புரம் அருகே பாலத்தில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பைக் நிலை தடுமாறி விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று இரவு இறந்தார். இதுகுறித்து புதுக்கோட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News