மதுபாட்டில் விற்பனை செய்தவர் கைது !
போலீசார் குட்டத்துப்பட்டி பகுதியில் ரோந்து பணியின் போது மதுபாட்டில் விற்பனை செய்தவரை கைது செய்தனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-04-03 05:58 GMT
மது
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார் குட்டத்துப்பட்டி பகுதியில் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு அதே ஊரை சேர்ந்த மரிய ஆரோக்கியம் (49) என்பவர் மது விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஆரோக்கியத்தை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.