பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியர் கைது !

நெல்லையில் பாலியல் தொந்தரவு கொடுத்த தலைமை ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-03-18 05:26 GMT

காவல் நிலையம்

நெல்லை மாவட்டம் ராதாபுரத்தை சேர்ந்தவர் சார்லஸ். இவர் பிரகாசபுரத்தில் உள்ள தனியார் தொடக்க பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் அந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மூன்று மாணவிகளிடம் பாலியல் தொந்தரவில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து மாணவிகளின் பெற்றோர்கள் வள்ளியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் சார்லஸை நேற்று (மார்ச் 17) கைது செய்தனர்.
Tags:    

Similar News