வீடு மற்றும் கடைகளை சேதம்ப்படுத்தும் கரடியால் பொதுமக்கள் அச்சம்.

Update: 2023-11-21 06:50 GMT

கரடி சேதப்படுத்திய கடை 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நீலகிரி மாவட்டம் பந்தலூர் அத்திக்குன்னா இரும்பு பாலம் பெருங்கரை போன்ற கிராம பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக உலாவரும் கரடி வீடுகளையும் கடைகளையும் சேதப்படுத்தி வருகிறது. கரடியை கூண்டு வைத்து பிடிக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்த நிலையில் அத்திக்குன்னா பகுதியில் உள்ள ஒரு இடத்தில் கூண்டு வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று மீண்டும் அதே பகுதியில் உலா வந்த கரடி வீடு , மற்றும் அங்கிருந்த கடைகளின் கதவுகளை உடைத்து பொருட்களை சேதப்படுத்தி உள்ளது. தொடர்ந்து கரடி இந்த கிராம பகுதிகளில் உலா வந்து மக்களை அச்சுறுத்தி வருவதால் அதிகமாக கூண்டுகளை வைத்து கரடியை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News