குட்டிபாம்புகளால் கிராமமக்கள் அச்சம் !

குட்டிபாம்புகளால் தொடர்ந்து நான்காவது நாளாக அச்சத்தோடு தூக்கமின்றி சிரமப்பட்டு வரும் அப்பகுதி கிராமமக்கள்

Update: 2024-02-29 10:30 GMT

குட்டிபாம்பு

ஆண்டிபட்டி அருகே பிச்சம்பட்டி கிராமத்தில் கழிவு நீர் வாய்க்கால் வழியாக தெருக்களில் படையெடுத்து வரும் குட்டிபாம்புகளால் தொடர்ந்து நான்காவது நாளாக அச்சத்தோடு தூக்கமின்றி சிரமப்பட்டு வரும் அப்பகுதி கிராமமக்கள்.  இதுதொடர்பாக ஊராட்சி நிர்வாகம், காவல்துறை, தீயணைப்புதுறைக்கு பலமுறை புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியம் காட்டுவதாக குற்றம் சாட்டும் கிராம மக்கள் விஷ பாம்புகுட்டிகளின் மூலம் தங்கள் பகுதி மக்களுக்கு ஆபத்து ஏற்படும் முன் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள பிச்சம்பட்டி கிராமத்தின் கிழக்குதெரு பகுதியில் 100 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் கடந்த நான்கு நாட்களாகவே இப்பகுதிகளில் உள்ள கழிவு நீர் வாய்க்கால் வழியாக அவ்வப்போது படை எடுத்து வரும் பாம்புகுட்டிகளால் மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர் வீடுகளுக்கு முன்பாக உள்ள கழிவுநீர் வாய்க்கால் வழியாகவும் வீடுகளுக்கு வெளியே வாசல், பாத்ரூம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் ஊர்ந்து வருவதாக தெரிவிக்கும் மக்கள் குழந்தைகள் அதிகம் வசிக்கும் இப்பகுதியில் குழந்தைகளை வைத்துக்கொண்டு உயிர் பயத்தோடு நான்கு நாட்களாக இருப்பதாக கூறுகின்றனர் நான்கு நாட்களாக அவ்வப்போது பாம்பு குட்டிகள் வந்து கொண்டே இருக்கும் நிலையில் இதனை தடுக்க வேண்டும் என்று பிச்சம்பட்டி ஊராட்சி நிர்வாகத்திடமும், ஆண்டிப்பட்டி காவல்துறையிடமும், தீயணைப்புத் துறையினரிடமும் பலமுறை புகாரளித்தும் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருப்பதாக வேதனை தெரிவிக்கும் இப்பகுதி மக்கள் விஷ பாம்புகளிடமிருந்து தப்பிக்க செய்வதறியாது இருக்கும் தங்களுக்கு ஏதேனும் ஆபத்து ஏற்படும் முன் உரிய பாதுகாப்பு அளித்து தெரு பகுதியில் தொடர்ச்சியாக வரும் பாம்பு குட்டிகளை முழுவதுமாக அப்புறப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News