தந்தையை அடித்து கொன்ற மகன்

அன்னவாசல் அருகே இரும்பு கம்பியால் தந்தையை அடித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.

Update: 2024-05-04 11:20 GMT

புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள கீழக்குறிச்சியை சேர்ந்தவர் கணேசன் (60). இவருக்கு இரண்டு மகன் ஒரு மகள் உள்ளனர்.  மூத்த மகன்

வினோத்குமாருக்கும்(35) தந்தைக்கும் அடிக்கடி தகராறு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை ஏற்பட்ட வாய் தகராறு முற்றியதில் கோபமடைந்த வினோத்குமார் அருகில் கிடந்த கம்பியை எடுத்து தனது தந்தை கணேசனை தலையில் பலமுறை தாக்கியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த கணேசன் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்து உயிர் இழந்தார். இதனையடுத்து. என்ன செய்வதென்று தெரியாமல் தவித்த வினோத் குமார் தற்கொலை செய்து கொள்ளும் முடிவோடு அருகில் இருந்த கிணற்றுக்குள் குதித்துள்ளார். கிணற்றில் இடுப்பளவு தண்ணீர் மட்டுமே இருந்ததால் வினோத்குமார் காயமின்றி உயிர் தப்பினார்.  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற அன்னவாசல் போலீசார்  கிணற்றுக்குள் இருந்த வினோத்குமாரை மீட்டனர். அதனை தொடர்ந்து வினோத் குமார் மீது வழக்கு பதிந்த போலீசார் கொலை குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News