டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து தட்டி கேட்டதால் கத்திக்குத்து !

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து தட்டி கேட்டதால் கத்திக்குத்து. காவல்துறை வழக்கு பதிவு.

Update: 2024-03-12 12:14 GMT

காவல் நிலையம்

டூவீலர்கள் நேருக்கு நேர் மோதி விபத்து தட்டி கேட்டதால் கத்திக்குத்து.காவல்துறை வழக்கு பதிவு. கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, குருணை குளத்துப்பட்டி அருகே உள்ள கல்லுகடை மேடு பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மகன் பொன்ராஜ் வயது 34. இவர் மார்ச் 11ஆம் தேதி மதியம் 2 மணி அளவில், வீர கவுண்டம்பட்டியில் இருந்து கல்லுமடை செல்லும் சாலையில் உள்ள நால்ரோடு அருகே சென்றபோது, எதிர் திசையில், கடவூர் தாலுக்கா, வீரணம்பட்டி அருகே உள்ள விரலிப்பட்டி பகுதியைச் சேர்ந்த இளையராஜா வயது 26 என்பவர், வேகமாக ஓட்டி வந்த டூ வீலர் பொன்ராஜ் ஓட்டிச் சென்ற டூவீலர் மீது நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இளையராஜா டூவீலரில் வேகமாக ஓட்டி வந்து மோதியது குறித்து பொன்ராஜ் தட்டி கேட்டு உள்ளார். இதனால் கோபமடைந்த இளையராஜா, தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பொன்ராஜை தலையில் குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த பொன்ராஜை அருகில் உள்ள மயிலம்பட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக பொன்ராஜ் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர், இளையராஜாவை கைது செய்து அவர் மீது வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் சிந்தாமணிப்பட்டி காவல்துறையினர். இளையராஜா மீது கரூர், குளித்தலை, கோவை என பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News