மாடியில் இருந்து விழுந்தவர் பலி

கள்ளகுறிச்சி மாவட்டம், பெருவங்கூரில் மாடியில் இருந்து தவறி விழுந்தவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2024-05-11 05:25 GMT

மாடியில் இருந்து விழுந்தவர் பலி

கள்ளக்குறிச்சி அடுத்த பெருவங்கூரைச் சேர்ந்தவர் கணேசன் மகன் வேல்முருகன், 32; கடந்த 4ம் தேதி இரவு 8:00 மணியளவில் வீட்டின் முதல் மாடியில் உள்ள கைப்பிடி சுவற்றில் அமர்ந்திருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்தார். இதில், தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடன் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்றவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை வேல்முருகன் இறந்தார். புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
Tags:    

Similar News