ரேஷன் கடை அமைத்துத்தர கோரிக்கை மனு !

காளையார்கோவில் அருகே ரேஷன் கடை அமைத்துத்தர கோரி கிராம மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2024-03-04 11:35 GMT

மனு 

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில் அருகே உள்ளது வெட்டிக்குளம் சோழவந்தான் கிராமம். இக்கிராமத்தில் சுமார் 200 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவர்களுக்கான ரேஷன் கடை சுமார் ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒய்யவந்தான் கிராமத்தில் அமைந்துள்ளது. ரேஷன் பொருட்களை வாங்க காட்டு வழிப்பாதை வழியாக சுமார் 4 கிலோ மீட்டர் நடந்து சென்று பொருட்கள் வாங்குவது வழக்கம். கடந்த மாதம் தனியே காட்டுப் பகுதி வழியாக சென்ற மூதாட்டி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். இதுவரை கொலை குற்றவாளி கைது செய்யப்படாத நிலையில், இரு கிராம மக்களும் காட்டு வழியே சென்று ரேஷன் பொருட்கள் வாங்குவதிற்கு அச்சமடைந்து பொருட்கள் வாங்குவதில்லை என கூறப்படுகிறது. இதனால் ரேஷன் கார்டு இருந்தும் பாதுகாக்கப்பட்ட சூழலால் ரேஷன் பொருட்களை வாங்க முடியாமல், இக்கிராமங்களைச் சேர்ந்த 200 குடும்பங்கள் அவதி அடைந்து வருகின்றனர். இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு வெட்டிக்குளம்பகுதியில் புதிதாக ரேஷன் கடையை அமைத்து தர வேண்டும் என இரு கிராம மக்களும், ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளனர்.
Tags:    

Similar News