கணவரை இரும்பு கம்பியால் தாக்கி  கொலை செய்த பெண் கைது

Update: 2023-11-20 03:53 GMT

கைது 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

ராமநாதபுரம் ஒன்றியம் வாகவயல் கிராமத்தை சேர்ந்த வாழவந்தான் என்பவரின்மகன் முனியசாமி (49), கார்பென்டர் ஆக கூலி வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுமதி (39). முனியசாமி தினந்தோறும் மது அருந்திவிட்டு இரவு நேரத்தில் மனைவியுடன் சண்டை போடுவதும் அடிப்பதுமாக இருந்துள்ளார்.நேற்று இரவு வழக்கம்போல் முனியசாமி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது இருவருக்கும் ஏற்பட்ட சண்டையில் சுமதி அடி தாங்க முடியாமல் வீட்டில் கிடந்த இரும்பு கம்பியை எடுத்து முனியசாமியை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து இறந்துள்ளார்.இதுகுறித்து திருப்பாலைக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு)விமலா வழக்கு பதிவு செய்து சுமதியை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர்.

Tags:    

Similar News