தென்காசியில் திருப்பணிகளுக்காக சாரம் கட்டும் பணி நிறைவு !!

தென்காசியில் திருப்பணிகளுக்காக சாரம் கட்டும் பணி நிறைவடைந்தது.

Update: 2024-03-07 09:51 GMT
தென்காசியில் திருப்பணிகளுக்காக சாரம் கட்டும் பணி முடிந்தது
தென்காசி மாவட்டம் தென்காசி நகரில் வரலாற்று சிறப்புமிக்க காசி விஸ்வநாதசுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் அஷ்டப் பந்தன மகா கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் முதற்கட்டமாக 182 அடி உயரம் கொண்ட ராஜகோபுரத்தின் நான்கு புறமும் சாரம் கட்டும் பணி கடந்த ஒரு மாத காலமாக நடைபெற்றது. இப்பணி நேற்று மாலையுடன் நிறைவடைந்தது. இனி கோபுரம் புதுப்பிக்கும் பணி நடைபெறும் என கோவில் நிர்வாகிகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் சுற்றுலாப் பயணிகள் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News