இளம்பெண் மாயம் கணவர் போலீசில் புகார்!

இளம்பெண் மாயமான நிலையில் கணவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

Update: 2024-04-03 04:28 GMT

இளம்பெண் மாயம் 

திருமயம்: அரிமளம் ஒன்றியம் ஏம்பல் ஊராட்சி எனாகம் கிராமத்தை சேர்ந்தவர் பெரியசாமி(25). விவசாயி. இவரது மனைவி புவனா (20). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண்டுகள் ஆகின்றன. குழந்தை இல்லை. இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட புவனா சம்பவத்தன்று வீட்டை விட்டு வெளியேறினார். இதுகுறித்த புகாரின்பேரில் ஏம்பல் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News