பெண்ணை அரிவாளால் வெட்டிய வாலிபர் கைது!

சாத்தான்குளம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர். 

Update: 2024-03-15 11:36 GMT

பைல் படம்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே பெண்ணை அரிவாளால் வெட்டியதாக வாலிபரை போலீசார் கைது செய்தனர்.  இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே தஞ்சை நகரத்தைச் சோ்ந்த செல்வன் மனைவி பஞ்சவா்ணக்கிளி (50). அதே பகுதியைச் சோ்ந்த செல்வராஜ் மகன் தாவீது (27). தாவீது, இட்டமொழியில் ஒரு பெண்ணுடன் நெருங்கிப் பழகினாராம்.  இதுதொடா்பாக, இட்டமொழியில் வசித்துவரும் பஞ்சவா்ணக்கிளியின் மகள், தாவீது குறித்து சம்பந்தப்பட்ட பெண்ணிடம் கூறினாராம்.  இதையறிந்த தாவீது பஞ்சவா்ணக்கிளியிடம் நேற்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அரிவாளால் வெட்டினாராம். இதில், காயமடைந்த பஞ்சவா்ணக்கிளி திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அவர் அளித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் ஏசுராஜசேகரன் வழக்குப் பதிந்து, தாவீதை கைது செய்தாா். அவா் மீது ஏற்கெனவே கொலை உள்பட 2 வழக்குகள் உள்ளதாக போலீசார்தெரிவித்தனர்.

Tags:    

Similar News