அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டி ஆர்ப்பாட்டம் !
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே அடிப்படை வசதிகள் கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Update: 2024-03-11 10:22 GMT
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முடங்கியார் சாலையில் கிருஷ்ணாபுரம் பஞ்சாயத்திற்க்கு உட்பட்ட வீரதர்மாபுரம், காந்திநகர், மற்றும் ஓடைப்பட்டி, ஆகிய பகுதிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளில் அடிப்படை வசதிகளான வாருகால் குடிநீர் தெரு விளக்கு ஆகியவற்றை செய்து தரக்கோரி கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவரை கண்டித்து அப்பகுதி 60 மேற்ப்பட்டோர் கண்டண ஆர்ப்பாட்டம் செய்தனர். இது குறித்து தகவல் அறிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் வடக்கு காவல் காவல்துறையினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் நித்யாவின் கணவர் விஜயகுமார் இரண்டு நாட்களுக்குள் அடிப்படை பிரச்சனைகள் தீர்க்கப்படும் என உறுதி அளித்ததின் பெயரில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கலைந்து சென்றனர்.