வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

செங்கல்பட்டு மாவட்டம், கடமலைப்புத்துாரில் நடைபெற்ற வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-04-19 14:05 GMT
வரதராஜ பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

செங்கல்பட்டு மாவட்டம்,அச்சிறுபாக்கம் அடுத்த கடமலைப்புத்துாரில், பெருந்தேவி தாயார் உடனுறை வரதராஜ பெருமாள் கோவில் உள்ளது. இங்கு, ராமநவமி கர்ப்ப உற்சவ பெருவிழா மற்றும் 16-ம் ஆண்டு திருக்கல்யாணம் நேற்று நடந்தது. நேற்று, காலை 5:00 மணிக்கு, கோ பூஜையுடன் துவங்கப்பட்டு, மங்கல இசை நிகழ்த்தப்பட்டது.பின், காலை 10 மணிக்கு சிறப்பு அபிஷேக தீபாராதனை நடந்தது. பின், ஸ்ரீபகவத்கீதா பாராயணம் நடந்தது.

பிற்பகலில், நாலாயிர திவ்யபிரபந்தம் மற்றும் இராம காவிய பரத நாட்டிய கலைநிகழ்ச்சிகள் நடந்தன. முக்கிய நிகழ்வாக, மாலை 5:00 மணிக்கு, ராமர்- - சீதாலட்சுமி திருக்கல்யாணம் மற்றும் பட்டாபிஷேக உற்சவம் நடந்தது. இரவு, மலர்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில், ராமர் -- சீதாலட்சுமி திருக்கல்யாண பட்டாபிஷேக சிறப்பு அலங்காரத்தில், பஜனை குழுவினருடன் முக்கிய வீதிகளில் திருவீதி உலா நடந்தது.

இதில், பெண்கள் இல்லங்கள்தோறும் கற்பூரம் ஏற்றி, ஆரத்தி எடுத்து ராமர் -- சீதாலட்சுமியை வழிபட்டனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags:    

Similar News