திருவண்ணாமலை நகராட்சி 5-வது வார்டில் அ.தி.மு.க. பூத் கமிட்டி முகாம்
திருவண்ணாமலை நகராட்சி 5-வது வார்டில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம் நடைபெற்றது.
By : King 24x7 Website
Update: 2023-10-30 10:55 GMT
திருவண்ணாமலை நகராட்சி 5-வது வார்டில் அ.தி.மு.க. பூத் கமிட்டி அமைத்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் முகாம் நடைபெற்றது. முகாமில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் ராமு மற்றும் கிழக்கு மாவட்ட செயலாளர் எஸ்.ராமச்சந்திரன் ஆகியோரிடம் நகர மன்ற உறுப்பினர் சிவில் சீனிவாசன் இளைஞர், இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அணி புதிய உறுப்பினர்கள் பட்டியலை வழங்கினார்.இதில் பேரவை மாவட்ட செயலாளர் பெருமாள் நகர் கே.ராஜன், அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சுனில்குமார், நகர செயலாளர் ஜெ.செல்வம், எம்.ஜி.ஆர் இளைஞர் அணி மாவட்ட இணை செயலாளர் கதர் சீனு, இளைஞர் அணி நகர செயலாளர் இளஞ்செழியன், பேரவை மாவட்ட தலைவர் இளவழகன், துணைத் தலைவர் ரேடியோ ஆறுமுகம், முன்னாள் நகரமன்ற உறுப்பினர்கள் போர் மன்னன் ராஜா, மனோ முருகன், நகர அவைத்தலைவர் பழனி, பர்மா ராஜா, கலைச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.