காவலர்களுக்கு தொப்பி மற்றும் கண்ணாடி வழங்கிய எஸ். பி

வெயில் தாக்கத்திலிருந்து தற்காத்து கொள்ள போக்குவரத்து காவலர்களுக்கு திருவண்ணாமலை மாவட்ட எஸ்பி தொப்பி மற்றும் கண்ணாடிகளை வழங்கினார்.

Update: 2024-03-28 07:06 GMT

தொப்பி மற்றும் கண்ணாடிகளை வழங்கிய எஸ்பி 

திருவண்ணாமலையில் கோடை வெயில் அதிகமாக உள்ளது ‌.வெயிலின் தாக்கத்திலிருந்து போக்குவரத்து காவல் துறையினர் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் தொப்பி, கண் கண்ணாடி, மோர் போன்ற பொருட்களை திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மரு. கி. கார்த்திகேயன் வழங்கினார். அப்போது திருவண்ணாமலை நகர உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ரவிச்சந்திரன் மற்றும் காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News