கொரடாச்சேரி பேரூராட்சி பகுதியில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கொரடாச்சேரி பேரூராட்சி பகுதியில் பொங்கல் பரிசு டோக்கன் வழங்கும் நிகழ்வை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார்.

Update: 2024-01-10 01:10 GMT

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தைப்பொங்கலை முன்னிட்டு பொங்கல் பரிசாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு நீள கரும்புடன் ரூபாய் ஆயிரம் ரொக்க பணம் வழங்க தமிழக அரசால் ஆணையிடப்பட்டுள்ளது . அதனை தொடர்ந்து பொங்கல் பரிசு விநியோகம் நாளை முதல் 14ஆம் தேதி வரை வழங்கப்பட உள்ளது. அந்த வகையில் பொங்கல் பரிசு பெறுவதற்கான தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலை கடை ஊழியர்களால் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு சென்று டோக்கன் வழங்கப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியர் சாருஸ்ரீ நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் அப்போது அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News