கர்ப்பத்தை கலைக்க கூறி பெண்ணுக்கு கொலை மிரட்டல்

பெண்ணின் கர்ப்பத்தை கலைக்க சொல்லி கொலை மிரட்டல் விடுத்த காதலன் மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Update: 2024-02-01 05:11 GMT

வழக்கு பதிவு 

கோவை: சென்னையை சேர்ந்த இளம்பெண் கருமத்தம்பட்டி பகுதியில் தங்கி அப்பகுதியில் உள்ள உணவகத்தில் வேலை செய்து வந்துள்ளார்.இவர் தங்கியுள்ள வீட்டின் அருகில் வசிக்கும் வாலிபருடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வாலிபர் இளம்பெண்னை காதலிப்பதாக கூறிய நிலையில் ஆரம்பத்தில் மறுப்பு தெரிவித்தவர் நாளடைவில் காதலிக்க தொடங்கி உள்ளார்.திருமணம் செய்வதாக இளைஞர் கூறி பலமுறை உடலுறவு கொண்டதால் கர்ப்பமடைந்த அந்த பெண் தன்னை உடனடியாக திருமணம் செய்து கொள்ள வலியுறுத்தி உள்ளார்.சம்பவத்தன்று இளைஞர் அந்த பெண்னிடம் இளைஞரும் அவரது தாயாரும் கர்ப்பத்தை கலைக்காவிட்டால் எரித்து கொன்று விடுவோம் என கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து இளம்பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கருமத்தம்பட்டி போலீசார் இருவரையும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Tags:    

Similar News