வள்ளலார் சபையில் முப்பெரும் விழா

திருவண்ணாமலையில் நடைபெற்ற வள்ளலார் சபை முப்பெரும் விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.

Update: 2024-03-19 15:11 GMT

திருவண்ணாமலையில் நடைபெற்ற வள்ளலார் சபை முப்பெரும் விழாவில் பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டன.


திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பெண்ணாத்தூர் அடுத்த வேட்டவலம் வள்ளலார் சபையில் 327 ஆம் மாத பூச விழா, விருது பெற்றவர்களுக்கு பாராட்டு வழங்கு விழா, மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா இன்று நடைபெற்றது இந்த விழாவிற்கு கவிஞர் முகில்வண்ணன் தலைமை வகித்தார். புயல்மொழிப் புலவர் கோவிந்தசாமி, முனைவர் முத்து கார்த்திகேயன், பன்னீர்செல்வம் முன்னிலை வகித்தனர். செயலர் பச்சையம்மாள் அனைவரையும் வரவேற்றார். பாவலர் குப்பன் பங்கேற்று கருத்துகளை வழங்கினார்.
Tags:    

Similar News