பள்ளியில் முப்பெரும் விழா

சேலம் ஹோலி கிராஸ் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

Update: 2024-06-24 08:51 GMT

 சேலம் ஹோலி கிராஸ் பள்ளியில் முப்பெரும் விழா நடந்தது.

சேலம் அம்மாபேட்டை ஹோலி கிராஸ் பள்ளியில் புதிய மாணவ அமைப்பின் பதவியேற்பு விழா, பல்வேறு துறை மன்றங்கள் மற்றும் விளையாட்டு அணிகள் தொடக்க விழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது. பள்ளியின் முதல்வரும், தாளாளருமான சேசுராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர்களாக ஓமலூர் செயின்ட் ஜோசப் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் இயக்குனர் விமல், அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் பால்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர் மன்றங்களையும், விளையாட்டு அணிகளையும் தொடங்கி வைத்தனர்.

இதையடுத்து 2023-2024 கல்வியாண்டில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு வெள்ளி நாணயங்களை பெற்றோர் ஆசிரியர் கழக முன்னாள் தலைவர் ராஜசேகரன், உலகநம்பி ஆகியோர் பரிசாக வழங்கி பாராட்டினர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் துணை முதல்வர் அந்துவான் குணசீலன் செய்திருந்தார். இதில் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள், முன்னாள் மாணவர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News